Wednesday, February 15, 2012

இனப் பெருக்கம்


வெள்ளாடுகளுக்கும் செம்மறியாடுகளுக்கும் உள்ள வேறுபாடுகள்
  1. வெள்ளாடுகள் நீண்ட கால்களுடனும், மெலிந்த உடலுடனும் உயரமாகக் காணப்படும். ஆனால் பொதுவாக செம்மறி ஆடுகள் குட்டையான கால்களுடனும், தடித்த உடலமைப்புடனும் இருக்கும்
  2. செம்மறிக் கடாக்களுக்கு வெள்ளாட்டுக் கடா போன்று கெட்ட நாற்றம் இருக்காது
  3. வெள்ளாடுகளுக்குத் தாடி இருக்கும். செம்மறி ஆடுகளுக்கு இருக்காது
  4. வெள்ளாடுகளின் வால் தூக்கி இருக்கும். செம்மறி ஆடுகளின் வால் தொங்கிக் கொண்டு இருக்கும்
  5. வெள்ளாடுகள் நிமிர்ந்து நடந்து செல்லும். செம்மறி ஆடுகள் குனிந்து செல்லும்
  6. செம்மறி ஆடுகளுக்குப் பக்க வாட்டில் திருகிய கொம்புகள் உள்ளன. வெள்ளாடுகளுக்கு நேரான அல்லது பின்னோக்கி வளைந்த கொம்புகள் உள்ளன
இனப் பெருக்கமும்
வெள்ளாடுகளில், பிட்டியூட்டரி என்னும் நாளமில்லாச் சுரப்பி, வெள்ளாடுகள் குட்டி போடுவதை முறைப்படுத்துகின்றது. பிறந்த குட்டிகள் நன்கு உயிர்வாழ ஏற்றக் கால நிலை இருக்க வேண்டும்.
நமது இந்திய நாட்டின் சமுனாபாரியுத் பீட்டல் இன வெள்ளாடுகளும் சூலை முதல் செப்டம்பர் வரை சினைப் பருவத்திற்கு வரும்.
பார்பாரி, வங்காளக் கறுப்பு, நம் தமிழகப் பகுதி சாட்டு ஆடுகள் ஆகியவை ஆண்டு முழுவதும் சினைக்கு வரும். எனினும், வறட்சியில்லாமல், மழை பெய்து புல் பூண்டு வளர்ந்துள்ள சூழ்நிலையிலேயே வெள்ளாடுகள் சினைக்கு வந்து நன்கு கருத்தரிக்கின்றன.
வெள்ளாடுகளில் சினைத் தருண அறிகுறிகள்
  1. பெட்டை ஆடு, நிலை கொள்ளாமல் அங்கும், இங்கும் ஓடும்
  2. தொடர்ந்து கத்திக் கொண்டிருக்கும்
  3. வெள்ளாட்டின் வெளிப்புற இன உறுப்புகள் வீங்கிச் சிவந்திருக்கும்
  4. பால் கொடுக்கும் ஆட்டின் பால் அளவு குறைந்துவிடும்
  5. அடுத்த ஆடுகள் மீது தாவும்
  6. சிறப்பாக, ஆடுகள் வாலைத் தொடர்ந்து விரைவாக அசைத்துக் கொண்டே இருக்கும்
சில ஆடுகளில், சினைத் தருண அறிகுறிகள் அதிகம் தெரியாமல் இருந்து விடும். இத்தகைய ஆடுகளைக் கடாக்களின் துணையுடன் கண்டு பிடித்துச் சினைப் பிடிக்க வைப்பது அவசியமாகும்.
சினைக்காலம்
  1. வெள்ளாடுகளில், சினைக் காலம் 151 நாட்களாகும். ஆகவே ஆண்டிற்கு இருமுறை வெள்ளாடுகளைக் குட்டிகள் ஈன வைக்கலாம். ஆனால், பாலுக்கான இனங்கள் வளர்க்கும்போது ஆண்டிற்கு ஒரு முறை ஈன வைப்பது வழக்கம்.
  2. நாட்டு ஆடுகளும், தலைச்சேரி, பார்பாரி, வங்காளக் கறுப்பு ஆடுகளும் குட்டி போட்ட 8 வாரங்களுக்குள் சினைப் பருவத்திற்கு வந்துவிடும். ஆனால் பல வெளிநாட்டு இன வெள்ளாடுகள் குட்டி போட்டுப் பல மாதங்கள் ஆன பின்பே சினைக்கு வருகின்றன.
  3. தராணமாகச் சாணன் ஆடுகள் குட்டி போட்ட 7 மாதங்கள் சென்ற பின்பே முதல் முறையாகச் சினைக்கு வருகின்றன.
  4. வெள்ளாடுகள், 18 முதல் 21 நாட்களுக்கு ஒரு முறை சினைக்கு வரும். சினைத் தருணம் 2 முதல் 3 நாட்களுக்கும் நீடிக்கும். ஆனால், குளிர்காலத்தில் சினைத் தருணம் 24 முதல் 36 மணி நேரம் மட்டுமே இருக்கும்.
  5. வெள்ளாட்டுக் கடாக்கள், பெட்டை ஆடுகளுடன் இருப்பது. அவை சினைப் பருவத்திற்கு வரத் தூண்டி கருத்தரிக்க வைக்கின்றன எனப் பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
இனப் பெருக்கம் செய்யத் தகுந்த வயது
வெள்ளாடுகள் மிகக் குறைந்த வயதிலேயே இனப் பெருக்கம் செய்யும் பருவத்தை அடைந்து விடுகின்றன. ஏழு மாத வயதில் குட்டி ஈன்ற பெட்டை ஆடும் உண்டு. ஆனால் இதி பெட்டை ஆட்டையும், குட்டியையும் மிகப் பாதிக்கும். நம் நாட்டு ஆடுகள் 8 முதல் 10 மாத வயதில் இனப்பெருக்கும் செய்யலாம். வெளி நாட்டினம் என்றால் 15 முதல் 18 மாத வயதில் இனவருத்தி செய்யலாம். இளமையில் வருவத்திற்கு வந்து விடுவதால், ஆண், பெண் குட்டிகளைப் பிரித்து வளர்ப்பது சிறந்தது.
பொலிவு செய்ய ஏற்ற நேரம்
முதல் சினை அறிகுறு தோன்றிய 10 முதல் 15 மணி நேரத்திற்குள் பொலிவு செய்வது சிறந்தது. பொதுவாக, ஒரு முறை பொலிவு செய்வது போதுமானது. நமது நாட்டில் சில பகுதிகளில், வெள்ளாட்டுக் கடா விந்து உடைற நிலையில் பாதுகாக்கப்பட்டுச் செயற்கை முறையிலும் கருவூட்டல் செய்யப் பயன்படுத்தப்படுகின்றது.
சினையான ஆடுகளின் அறிகுறிகள்
ஆடுகள் சினைப் பட்டதற்கான அறிகுறிகள் 2 – 1/2 மாதத்திற்குப் பின்பே தெரியவரும். குட்டி போடுமுன் கடைசி இரு வாரங்களுக்கு வெளியே அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். சினையான ஆடுகளின் மடி பெருக்க ஆரம்பிக்கும். அமைதியாகவும் காணப்படும். 67% உறுதியுடனேயே வெள்ளாடுகளில் சினை கண்டு பிடிக்க முடியும். வெள்ளாடுகளில், கருத்தரியாமைப் பிரச்சினை மிகக் குறைவு.
குட்டி போடும் தருண அறிகுறிகள்
சிறப்பாக, இனச் சேர்க்கை செய்த நாள்கள் கடந்து 151 நாள்களில் குட்டி ஈனும். இதன் அடிப்படையிலேயே ஆடுகளைத் தனிமைப் படுத்தித் தேவையான வைக்கோல் பரப்பித் தயார் செய்ய வேண்டும்.
குட்டி போடும் ஆடுகள் தனிமையை விரும்பிச் சென்று, காலால் தரையைத் தேய்க்கும். பெண் உறுப்பிலிருந்து இரத்தம் கலந்த கெட்டியான திரவம் வடியும். முதலில் இரு முன் காலும், தலையும் வெளியே வரும். குட்டி போடும் போது எவ்விதத் தொந்தரவும் செய்யாமல் இயற்கையாகக் குட்டி போட அனுமதிக்க வேண்டும். நச்சுக் கொடி. ஆடு குட்டி ஈன்ற ஒரு மணி நேரத்திற்குள் வெளியாகிவிடும்.
குட்டி போடும் நாட்காட்டி
பொலிவு செய்த
நாள்  
குட்டி ஈனும்
நாள்
பொலிவு செய்த
நாள்  
குட்டி ஈனும்
நாள்
ஜனவரி 1மே 31சூலை 1நவம்பர் 28
ஜனவரி 16சூன் 15சூலை 16டிசம்பர் 13
பிப்ரவரி 1சூன் 1ஆகஸ்ட் 1டிசம்பர் 19
பிப்ரவரி 16சூலை 16ஆகஸ்ட் 16ஜனவரி 13
மார்ச் 1சூலை 29செப்டம்பர் 1ஜனவரி 29
மார்ச் 16ஆகஸ்ட் 13செப்டம்பர் 16பிப்ரவரி 13
ஏப்ரல் 1ஆகஸ்ட் 29அக்டோபர் 1பிப்ரவரி 28
ஏப்ரல் 16செப்டம்பர் 13அக்டோபர் 16மார்ச் 15
மே 1செப்டம்பர் 28நவம்பர் 1மார்ச் 31
மே 16அக்டோபர் 13நவம்பர் 16ஏப்ரல் 15
சூன் 1அக்டோபர் 29டிசம்பர் 1ஏப்ரல் 30
சூன் 16நவம்பர் 13டிசம்பர் 16மே 15


Tuesday, February 14, 2012

இனப் பெருக்கம்


வெள்ளாடுகளுக்கும் செம்மறியாடுகளுக்கும் உள்ள வேறுபாடுகள்
  1. வெள்ளாடுகள் நீண்ட கால்களுடனும், மெலிந்த உடலுடனும் உயரமாகக் காணப்படும். ஆனால் பொதுவாக செம்மறி ஆடுகள் குட்டையான கால்களுடனும், தடித்த உடலமைப்புடனும் இருக்கும்
  2. செம்மறிக் கடாக்களுக்கு வெள்ளாட்டுக் கடா போன்று கெட்ட நாற்றம் இருக்காது
  3. வெள்ளாடுகளுக்குத் தாடி இருக்கும். செம்மறி ஆடுகளுக்கு இருக்காது
  4. வெள்ளாடுகளின் வால் தூக்கி இருக்கும். செம்மறி ஆடுகளின் வால் தொங்கிக் கொண்டு இருக்கும்
  5. வெள்ளாடுகள் நிமிர்ந்து நடந்து செல்லும். செம்மறி ஆடுகள் குனிந்து செல்லும்
  6. செம்மறி ஆடுகளுக்குப் பக்க வாட்டில் திருகிய கொம்புகள் உள்ளன. வெள்ளாடுகளுக்கு நேரான அல்லது பின்னோக்கி வளைந்த கொம்புகள் உள்ளன
இனப் பெருக்கமும்
வெள்ளாடுகளில், பிட்டியூட்டரி என்னும் நாளமில்லாச் சுரப்பி, வெள்ளாடுகள் குட்டி போடுவதை முறைப்படுத்துகின்றது. பிறந்த குட்டிகள் நன்கு உயிர்வாழ ஏற்றக் கால நிலை இருக்க வேண்டும்.
நமது இந்திய நாட்டின் சமுனாபாரியுத் பீட்டல் இன வெள்ளாடுகளும் சூலை முதல் செப்டம்பர் வரை சினைப் பருவத்திற்கு வரும்.
பார்பாரி, வங்காளக் கறுப்பு, நம் தமிழகப் பகுதி சாட்டு ஆடுகள் ஆகியவை ஆண்டு முழுவதும் சினைக்கு வரும். எனினும், வறட்சியில்லாமல், மழை பெய்து புல் பூண்டு வளர்ந்துள்ள சூழ்நிலையிலேயே வெள்ளாடுகள் சினைக்கு வந்து நன்கு கருத்தரிக்கின்றன.
வெள்ளாடுகளில் சினைத் தருண அறிகுறிகள்
  1. பெட்டை ஆடு, நிலை கொள்ளாமல் அங்கும், இங்கும் ஓடும்
  2. தொடர்ந்து கத்திக் கொண்டிருக்கும்
  3. வெள்ளாட்டின் வெளிப்புற இன உறுப்புகள் வீங்கிச் சிவந்திருக்கும்
  4. பால் கொடுக்கும் ஆட்டின் பால் அளவு குறைந்துவிடும்
  5. அடுத்த ஆடுகள் மீது தாவும்
  6. சிறப்பாக, ஆடுகள் வாலைத் தொடர்ந்து விரைவாக அசைத்துக் கொண்டே இருக்கும்
சில ஆடுகளில், சினைத் தருண அறிகுறிகள் அதிகம் தெரியாமல் இருந்து விடும். இத்தகைய ஆடுகளைக் கடாக்களின் துணையுடன் கண்டு பிடித்துச் சினைப் பிடிக்க வைப்பது அவசியமாகும்.
சினைக்காலம்
  1. வெள்ளாடுகளில், சினைக் காலம் 151 நாட்களாகும். ஆகவே ஆண்டிற்கு இருமுறை வெள்ளாடுகளைக் குட்டிகள் ஈன வைக்கலாம். ஆனால், பாலுக்கான இனங்கள் வளர்க்கும்போது ஆண்டிற்கு ஒரு முறை ஈன வைப்பது வழக்கம்.
  2. நாட்டு ஆடுகளும், தலைச்சேரி, பார்பாரி, வங்காளக் கறுப்பு ஆடுகளும் குட்டி போட்ட 8 வாரங்களுக்குள் சினைப் பருவத்திற்கு வந்துவிடும். ஆனால் பல வெளிநாட்டு இன வெள்ளாடுகள் குட்டி போட்டுப் பல மாதங்கள் ஆன பின்பே சினைக்கு வருகின்றன.
  3. தராணமாகச் சாணன் ஆடுகள் குட்டி போட்ட 7 மாதங்கள் சென்ற பின்பே முதல் முறையாகச் சினைக்கு வருகின்றன.
  4. வெள்ளாடுகள், 18 முதல் 21 நாட்களுக்கு ஒரு முறை சினைக்கு வரும். சினைத் தருணம் 2 முதல் 3 நாட்களுக்கும் நீடிக்கும். ஆனால், குளிர்காலத்தில் சினைத் தருணம் 24 முதல் 36 மணி நேரம் மட்டுமே இருக்கும்.
  5. வெள்ளாட்டுக் கடாக்கள், பெட்டை ஆடுகளுடன் இருப்பது. அவை சினைப் பருவத்திற்கு வரத் தூண்டி கருத்தரிக்க வைக்கின்றன எனப் பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
இனப் பெருக்கம் செய்யத் தகுந்த வயது
வெள்ளாடுகள் மிகக் குறைந்த வயதிலேயே இனப் பெருக்கம் செய்யும் பருவத்தை அடைந்து விடுகின்றன. ஏழு மாத வயதில் குட்டி ஈன்ற பெட்டை ஆடும் உண்டு. ஆனால் இதி பெட்டை ஆட்டையும், குட்டியையும் மிகப் பாதிக்கும். நம் நாட்டு ஆடுகள் 8 முதல் 10 மாத வயதில் இனப்பெருக்கும் செய்யலாம். வெளி நாட்டினம் என்றால் 15 முதல் 18 மாத வயதில் இனவருத்தி செய்யலாம். இளமையில் வருவத்திற்கு வந்து விடுவதால், ஆண், பெண் குட்டிகளைப் பிரித்து வளர்ப்பது சிறந்தது.
பொலிவு செய்ய ஏற்ற நேரம்
முதல் சினை அறிகுறு தோன்றிய 10 முதல் 15 மணி நேரத்திற்குள் பொலிவு செய்வது சிறந்தது. பொதுவாக, ஒரு முறை பொலிவு செய்வது போதுமானது. நமது நாட்டில் சில பகுதிகளில், வெள்ளாட்டுக் கடா விந்து உடைற நிலையில் பாதுகாக்கப்பட்டுச் செயற்கை முறையிலும் கருவூட்டல் செய்யப் பயன்படுத்தப்படுகின்றது.
சினையான ஆடுகளின் அறிகுறிகள்
ஆடுகள் சினைப் பட்டதற்கான அறிகுறிகள் 2 – 1/2 மாதத்திற்குப் பின்பே தெரியவரும். குட்டி போடுமுன் கடைசி இரு வாரங்களுக்கு வெளியே அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். சினையான ஆடுகளின் மடி பெருக்க ஆரம்பிக்கும். அமைதியாகவும் காணப்படும். 67% உறுதியுடனேயே வெள்ளாடுகளில் சினை கண்டு பிடிக்க முடியும். வெள்ளாடுகளில், கருத்தரியாமைப் பிரச்சினை மிகக் குறைவு.
குட்டி போடும் தருண அறிகுறிகள்
சிறப்பாக, இனச் சேர்க்கை செய்த நாள்கள் கடந்து 151 நாள்களில் குட்டி ஈனும். இதன் அடிப்படையிலேயே ஆடுகளைத் தனிமைப் படுத்தித் தேவையான வைக்கோல் பரப்பித் தயார் செய்ய வேண்டும்.
குட்டி போடும் ஆடுகள் தனிமையை விரும்பிச் சென்று, காலால் தரையைத் தேய்க்கும். பெண் உறுப்பிலிருந்து இரத்தம் கலந்த கெட்டியான திரவம் வடியும். முதலில் இரு முன் காலும், தலையும் வெளியே வரும். குட்டி போடும் போது எவ்விதத் தொந்தரவும் செய்யாமல் இயற்கையாகக் குட்டி போட அனுமதிக்க வேண்டும். நச்சுக் கொடி. ஆடு குட்டி ஈன்ற ஒரு மணி நேரத்திற்குள் வெளியாகிவிடும்.
குட்டி போடும் நாட்காட்டி
பொலிவு செய்த
நாள்  
குட்டி ஈனும்
நாள்
பொலிவு செய்த
நாள்  
குட்டி ஈனும்
நாள்
ஜனவரி 1மே 31சூலை 1நவம்பர் 28
ஜனவரி 16சூன் 15சூலை 16டிசம்பர் 13
பிப்ரவரி 1சூன் 1ஆகஸ்ட் 1டிசம்பர் 19
பிப்ரவரி 16சூலை 16ஆகஸ்ட் 16ஜனவரி 13
மார்ச் 1சூலை 29செப்டம்பர் 1ஜனவரி 29
மார்ச் 16ஆகஸ்ட் 13செப்டம்பர் 16பிப்ரவரி 13
ஏப்ரல் 1ஆகஸ்ட் 29அக்டோபர் 1பிப்ரவரி 28
ஏப்ரல் 16செப்டம்பர் 13அக்டோபர் 16மார்ச் 15
மே 1செப்டம்பர் 28நவம்பர் 1மார்ச் 31
மே 16அக்டோபர் 13நவம்பர் 16ஏப்ரல் 15
சூன் 1அக்டோபர் 29டிசம்பர் 1ஏப்ரல் 30
சூன் 16நவம்பர் 13டிசம்பர் 16மே 15

ஆடுகளுக்கு நுண்ணுயிரிகளால்(பாக்டீரியா) ஏற்படும் நோய்கள்



அடைப்பான்
இந்நோய் கண்ட ஆடுகளில் எந்த விதநோய் அறிகுறிகளும் காணாமல் நோய் தாக்கிய ஒருமணி நேரத்திற்குள்ளாக இறந்துவிடும். சிலசமயம் அதிக காய்ச்சல் காணப்படும்.ஆடு இறந்தவுடன் ஆசனவாய்,மூக்கு,காது போன்ற இயற்கை துவாரங்களிலிருந்து உறையாத கருஞ்சிவப்பு இரத்தம் வெளியேறும்.இது முக்கியமான அறிகுறியாகும்.இந்நோயை ஆன்டிபயாடிக் மருந்துகொண்டு கட்டுப்படுத்தலாம். நோய்தாக்கும் முன்னர் தடுப்பூசி போடவேண்டும்.
தொண்டை அடைப்பான்
தொண்டை அடைப்பான் நோய் பெரும்பாலும் இளவயது ஆடுகளை மழைக் காலத்தில் அதிகமாக பாதிக்கும்.இந்நோய்க் கிருமிகள் தொண்டையில் எப்பொழுதும் இருக்கும். ஆடுகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகுறையும் போது இந்தக் கிருமிகள் பெருகி நோயை உண்டுபண்ணும். நோயுற்ற ஆட்டில் அதிககாய்ச்சல்,நுரையீரல் பாதிப்பால் மூச்சுத்திணறல், மார்பு மற்றும் கழுத்துப் பகுதியில் வீக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படும்.காதுகள் தொங்கிவிடும். மூக்கு,வாயிலிருந்து சளி ஒழுகும்.நோயுற்ற 5-7  நாட்களில் ஆடுகள் இறந்துவிடும். ஆரம்பகாலத்தில் இந்நோயைக் கண்டுபிடித்தால் ஆன்டிபயாடிக் மருந்துக் கொண்டு எளிதில் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியும். நோய் தாக்கும் முன்னர் தடுப்பூசி போட வேண்டும்.
துள்ளுமாரி நோய்
துள்ளுமாரி நோய் எல்லா வயது ஆடுகளையும் பாதிக்கும்.ஆனால் இளம் வயது ஆடுகளே இந்நோயினால் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. மழைக் காலங்களில்புதிதாக முளைத்த பசுமையான புல்வெளியில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளுக்கு இந்நோய் ஏற்படும். நல்லதிடகாத்திரமான ஆடுகள் இந்நோயினால் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. மழைக்காலத்திற்கு முன் தடுப்பூசிபோட்டு இந்நோய் வராமல் தடுக்கலாம்.

Monday, February 6, 2012

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் , கொட்டில்முறை ஆடு வளர்ப்பு

குறைந்த அளவில் பராமரிப்பு ,மேலும் மேய்ச்சலுக்கு செல்லாமல் ,

வளர்க்கமுடியும் ! 1 லட்சம் முதலீட்டில் வருடத்திற்கு 50000 முதல் 60000 வரை லாபம் பெறமுடியும் !

நாள் ஒன்றுக்கு 2 மணிநேரம் செலவிட்டால் போதுமானது !
20 பெட்டை ஆடுகளும் 2 ஆண் ஆடுகளுமே போதுமானது !
வருடத்திற்கு 30 முதல் 40 குட்டிகள் மூலமும் , அதன் எருவின்
மூலமும் நல்ல வருமானம் ஈட்டலாம் !
நாட்டு ஆடுகளே சிறந்தது ஆடு ஒன்றுக்கு 1 சதுரமீட்டர் இருப்பிடமும் 10 சதுரமீட்டர் புள் வளர்க்க இடமும் போதுமானது !
 

அறிவியல் ரீதியான ஆடு வளர்ப்பு ஒரு வெற்றிக்கதை


என் பெயர் ஐ.நாசர். நான் கோவை மாவட்டத்தில் கோட்டைப்பாளையம் கிராமத்தில் கரூர்வாலா ஆட்டுப்பண்ணை என்ற பெயரில் கடந்த இரண்டு வருடங்களாக அறிவியல் ரீதியாக வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை வளர்த்து வருகின்றேன். முறையாக பயிற்சி பெற்று சிறந்த தொழில் நுட்பங்களைக் கடைபிடித்து பண்ணையை தொடங்குவதற்கு முன்பே பல வகையான பசுந்தீவனங்களைப் பயிரிட்டு அறிவியல் ரீதியாக பராமரித்தால் ""ஆடு வளர்ப்பு'' ஒரு லாபகரமான தொழில் என்பது நான் அனுபவத்தில் உணர்ந்த உண்மை. பசுந்தீவன உற்பத்தி: கோட்டைப்பாளையம் கிராமத்தில் மூன்று ஏக்கர் விவசாய பூமியை குத்தகைக்கு எடுத்து கோ 4 கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், கோ.எப்.எஸ்.29 தீவனச் சோளப்பயிர், வேலி மசால், குதிரைமசால் மற்றும் அகத்தி போன்ற பசுந்தீவனங்களைப் பயிரிட்டேன். ஆடுகளுக்கு தேவைப்படும் பசுந்தீவன அளவை கணக்குப்போட்டு, சிறிய சிறிய பாத்திகளை அமைத்து பசுந்தீவனங்களை முறையாகப் பயிரிட்டு வளர்ப்பதால் ஆண்டு முழுவதும் பசுந்தீவனப் பற்றாக்குறை ஏற்படுவது இல்லை.


 விற்பனை வழிமுறைகள்: 
நான் வியாபாரிகளுக்கு ஆடுகளை அறுப்பதற்கு விற்பனை செய்வதற்கு முன்பே எனது ஆடுகளை எடைபோட்டு, அதிலிருந்து வெட்டிய உடல் எடை எவ்வளவு கிடைக்கும் என்று கணக்குப்போட்டு என்னுடைய ஆட்டின் மதிப்பை தெரிந்துகொண்டு விலை நிர்ணயம் செய்துகொள்வேன். பிறகு வியாபாரியிடம் விற்பனை செய்யும்போது நான் நிர்ணயித்த விலைக்குக் குறைவாக ஆடுகளைக் கொடுக்க மாட்டேன். இவ்வாறு ஆடுகளை விற்பனை செய்வதால் அதிக லாபம் கிடைக்கிறது. மேலும் உயிருடன் ஆடுகளை விற்பதைவிட அவற்றை இறைச்சியாக மதிப்பூட்டி விற்பனை செய்யும்போது மேலும் அதிக லாபம் கிடைக்கும் என்பதை உணர்ந்து ஆடுகளை அறுக்க ஒரு இடத்தை ஏற்படுத்தி, போதிய வசதிகளைச் செய்து, தேவைப்படும்போது, ஆடுகளை அறுத்து இறைச்சியாகவும் விற்பனை செய்கிறேன்.

 மேலும் ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க ஆர்வமுள்ள பண்ணையாளர்கள் கீழ்க்காணும் சில முக்கிய விபரங்களை கருத்தில் கொள்ள வேண்டும். * ஆட்டுப்பண்ணை தொடங்கும் பண்ணையாளரே அந்தப் பண்ணையின் முதல் வேலையாளாக இருக்க வேண்டும். * ஆட்டுப்பண்ணை தொடங்க முதலில் முறையான பயிற்சி அவசியம். * பசுந்தீவன உற்பத்தியில் முக்கிய கவனம் செலுத்தி அதிக அளவு பயறுவகை மற்றும் மரவகைப் பசுந்தீவனங்களைப் பயிரிட வேண்டும். * உயர்ந்த இனக்கிடாய்களையும், பண்ணை முறையில் வளர்க்கப்பட்ட ஆடுகளையும் தேர்வு செய்து, வாங்கி, பண்ணையை தொடங்க வேண்டும். * நோய் தடுப்பு, குடற்புழு மற்றும் ஒட்டுண்ணிகள் நீக்கம் போன்ற பண்ணை நடைமுறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். * குட்டிகளில் இறப்பைத் தடுக்க, குட்டிகள் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். * நாம் வளர்த்த ஆட்டின் மதிப்பைத் தெரிந்துகொண்டு இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகளிடம் ஏமாறாமல் உடல் எடைக்கு ஏற்ப ஆடுகளை விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும். மேற்காணும் வழிமுறைகளை கடைபிடித்து அறிவியல் ரீதியாக ஆடுகளை வளர்த்தால் வெற்றி நிச்சயம்.